வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் மூலம், நான்காவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட “டியுனப் தன்சல” அதாவது இலவசமாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை டியூனப் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்கு முன்னால் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. புதிய அரசின் Cleans Srilanka நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயல்படுத்திய இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் திரு.பிரசன்ன குணசேன அவர்கள், சுற்றாடல் அமைச்சின் செயலாளர், போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர், மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம், வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் முச்சக்கரவண்டி சங்க உத்தியோகத்தர்களும் பங்குபற்றினர்.